எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
அதிகமாக கருத்து பதிந்த எண்ணங்கள்
இதுதான் சமத்துவம் !
~~~~~~~~~~~~~~~~~~~
சவுதி மக்களின் மற்றும்
உலக முஸ்லிம்களின்
அன்பிற்கு பாத்திரமான
மன்னர் அப்துல்லா
இறைவனடி சேர்ந்து
விட்டார்!
இவ்வளவு....
புகழ் வாய்ந்த
ஒரு தலைவர் இறந்துள்ளார்.
ஆனால்...
சவுதியில் அன்றாட
நடவடிக்கையில்
எந்த மாற்றமும் இல்லை.
நம் ஊரைப் போல்
கடைகள் அடைக்க
நிர்பந்திக்கப்படவில்லை.
சாலைகளில்...
வாகனங்கள் எந்த
பயமும் இன்றி
வழமைபோல் செல்கின்றன.
மொத்தத்தில்
இவரது இழப்பு....
சவுதியின்
அன்றாட வாழ்வில்
எந்த மாற்றத்தையும்
ஏற்படுத்தவில்லை.
எல்லோருக்கும்
எங்கு
இறப்புக்கான
தொழுகை நடைபெறுமோ
அந்த இடத்தில்
இவருக்கும்
த (...)
அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்...!
சில மாதங்களுக்கு முன் திரு. மணிகன் என்ற மென்பொருள் பொறியாளர் மற்றும் குறும்பட இயக்குநர் தளத்தில் எனது கவிதைகளை படித்து, எனக்கு அவரின் குறும்படம் ஒன்றில் கவிதை எழுதுவதற்கான வாய்ப்பு கொடுத்தார்.
கவிதையும் எழுதிகொடுத்துவிட்டேன். படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
அந்த படத்தின் பெயர் : உயிரெழுத்து.
கவிஞர், எழுத்தாளர், ரசிகர் என்று மூன்றுவிதமான கதாபாத்திரங்களுடன் உலக குறும்பட போட்டி ஒன்றுக்காக எடுக்கப்பட்டது.
அடுத்து..!
இப்போது.
பிரபல திரைப்பட நிறுவனத்திலிருந்து எனக்கொரு அழைப்பு வந்திருக்கிறது.
இந்த தளத்தில் நான் பதிவு செய்த கதை ஒன்ற (...)
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் .
நான் கவிதை எழுத ஆரம்பித்து , பல படைப்புகளை வடித்திட்டப் பின்னும் , ஓரிரு விருதுகள் பெற்றிருந்தாலும் ,
எனக்கு ஒரு முழு கவிஞனாக மாற்றிய பெருமை எழுத்து தளத்தையே சாரும் . எனக்கு ஒரு அங்கீகாரம் அளித்து , ஊக்கப்படுத்தி , என்னுடைய சமுதாய வேட்கைகளை பலவிதத்தில் வெளிப்படுத்திட ஓர் அரிய வாய்ப்பை அளித்திட்ட நம் தளத்தை என்றும் மறக்க முடியாது. மறுக்கவும் முடியாது . பல அருமை கவி நட்புகளை உருவாகிட முக்கிய காரணம் எழுத்து தளம் என்பதை மிகவும் மகிச்ச்சியோடு பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன் . தளத்தில் பல கவிஞர்கள் எனக்கு கருத்து மூலமும் வாழ்த்துக்கள் மூலமும் வளர்த்திட்டனர (...)
எழுத்து தளத்தில் எனது பயணம் 3 வருடம் பூர்த்தி
7 Dec 20125:31 pmகண்ணீரில்
...................................................
எழுத்தில் எனது மொத்த பதிவுகள்
#### கவிதை 6879 சொந்த கவிதைகளே பதிந்துள்ளேன்
மொத்த தேர்வு 25775 இது இன்னுமொரு சாதனை இது எப்படி நடந்தது என்பது ஒரு புதிராக உள்ளது. கடின உ ழைப்புக்கு கிடைத்த மகா வெற்றி . -------
இங்கு 3 நபருக்கு நான் நன்றி சொல்லியே ஆக வேண்டும்
1) HARI HARA NARAYANAN.V
2)AUDITOR SELVAMANI
3)Mohamed Sarfan
அண்ணன் ஜின்னா அண்ணன் பழனி குமார் மற்றும் மூத்த எழுத்தாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்
எழுத்தில் உள்ள பலம் அதிகம் என்றாலும் எழுத்தில் எனக்கு புரியாத விடயங்களும் உண்டு
1) இதை இயக்குபவர்கள் ஒருவரா....? பலரா ....? யாருடன் தொடர்புகொள்வது ...? பல sms போட்டேன் பதில் வரவில்லை ;குறிப்பாக எனது ப்ரோபிலே பெயரை கவிப்புயல் இனியவன் என்று மாற்றி தருமாறு பலமாதங்களுக்கு முன் கேட்டேன் பதில் வரவில்லை . மாற்றப்படவும் இல்லை .
2) பரிசு பெற்ற கவிதைக்குள் எனது கவிதை தெரிவாகவில்லை . இதற்கு நான் பிற பதிவுகள் பதிவதும் காரணமா ..? கட்டுரை கதை நகைசுவை (பிறர் பதிவுகள் ) அல்லது அதிக வாக்கு பெறாமையா ...?வாக்குக்கு பலருடன் வாக்கு கேட்க வேண்டும் .அதை நான் செய்ய முடியாது .எனது பணிசுமை தனிநபருடன் தொடர்பு கொள்ள இடமளிபப்தில்லை .
3) என்றாலும் இதுவரை எனக்கு ஊக்கம் தந்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி .எனது வேலை பழுவும் .வயதும் முன்னர்போல் பதிவுகளை மேற்கொள்ள இடமளிக்குமா ..? என்பது கேள்விக்குறியாக உள்ளது .
வாராந்தம் 500 கிலோ மீற்றர் பயணம் செய்கிறேன் .( போய் திரும்பி வர 1000 கிலோ மீற்றர் ) இதுவரை பேருந்தில் இருந்து கூட கவிதைகள் போட்டிருக்கிறேன் . நள்ளிரவு 1மணி 2 மணி க்கு எல்லாம் கவிதை எழுதி மறுநாள் வீடு வந்து கணனியில் பதிவேன் . இவ்வாறு கடினபட்டே இந்த சாதனையை அடைந்தேன்
திருக்குறளை கவிதையாக்கி பதிந்தேன் .(இன்பத்துப்பால் ) இன்று அதற்கு பெரிய முக்கிய துவத்தை வாசகர் தரவில்லை என்றாலும் ஒரு காலத்தில் அது திரும்பி பார்க்கப்படும்
நன்றி
இன்றைய எங்கள் ஊர் ( ஹைதராபாத் ) முதன்மை பத்திரிக்கையில் முதல் பக்கத்தில் ...
யாரு ? இவன் தந்தை என்னோற்றான் ..
என மகிழ்ச்சி தந்திருக்கிறான்.
என் மகன் வசந்தன்.
89% in X - ICSE
ICSE syllabus எவ்வளவு கடினமானது என இங்கு பலர் அறிந்திருக்கக் கூடும்.
நண்பர் கருணாநிதி அவர்கள் மிக குறைந்த கால அளவில் ஆயிரம் கவிதைகளை தாண்டி படைப்புக்கள் கொடுத்து வருகிறார். வாழ்வியல் கவிதைகள் மட்டுமல்ல..ஐம்பது வயதை தாண்டிய அந்த இளைஞர் படைத்த காதல் கவிதைகளும் பல. தனக்கே உரித்தான மொழிபெயர்ப்புத் திறன் கொண்டு நமது தளத்தில் சிறந்த மொழிபெயர்ப்பு படைப்பாளி என்கிற நிலையில் மகாகவி ஈரோடு தமிழன்பன் விருதும் பெற இருப்பவர். ஒரு முதிர்ந்த படைப்பாளி மட்டுமல்ல. நல்ல மனிதரும் கூட.அவரது எழுத்துப் பணிகள் தொடர எழுத்து நண்பர்கள் சார்பாக அவரை வாழ்த்துகிறேன்.
உலக கவிதை தினம்....
உலகத்தின் யோசனை
இன்று உன்னைப் பற்றியதாக
இருக்கும்...
எனது நமுத்த சமிஞ்சைகள்
தெளிவாகவே
அறிவுறுத்துகின்றன....
யாரேனும் ஒருவனுக்கோ ...
அல்லது.. யாவரிலும் ஒருவனுக்கோ
நீ
அட்சயப் பாத்திரமாகி இருக்கலாம்..
காதலுக்காய்
நீ இரண்டோ... நான்கோ வரிகளில்
புன்னகைத்திருக்கலாம்...
காட்சிக் குவியங்களின்
இடிபாடுகளில் நீ..
மூச்சுத் திணறிக் கொண்டும் இருக்கலாம்..
மரபுப் பிழைகளாகவும்
நவீனத் திருத்தங்களாகவும்
உன்னை வெளியீடு செய்திருப்பர்...
பிரெஞ்சு யுவதிகளின்
சிகையலங்காரம்... பிறிதோர் மொழிகளின்
நறுமணப் பரவலென...
சுகந்தங்கள் கக்கிக் கொண்டும்
இரு (...)
ஹைக்கூ தொடர்
எழுத்து தள தோழர் தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்...
வரும் சனிக்கிழமை (06-FEB-2016) அன்று உதயமாக போகிறது...
இந்த தொடரில் எழுத விரும்புவோர்கள் தங்கள் முழு பெயர் மற்றும் அலைபேசி எண் உடன் தங்களது உறுதி மொழியை எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்... கடந்த தொடரை போலவே ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒரு தேதியும் வரிசை எண்ணும் அளிக்கப் படும்...
இந்த தொடரில் எழுதுவதற்கு முன் ஹைக்கூ என்றால் என்ன வகை கவிதை என்பதை இப்போது பார்க்கலாம்...
ஹைக்கூ - சொல் விளக்கம்:
*******************************
‘ஹை’ என்பதற்கு ஜப்பானிய அடிச் சொல்லுக்கு அணுத்தூசி, கரு, முழுமையான கரு என்ற பொருள் உண்டு. ‘கூ’என்பது சொற்றொடர், வெளிப்பாடு, வாக்கியம், பகுதி, ஒரு வரி, ஓர் அடி, ஒரு செய்யுள், ஒரு கவிதை என்றும் பொருள் தருகிறது ஜப்பானிய அகராதி.
இவற்றை இணைத்துப் பார்க்கையில் ஹைக்கூ என்பது கரு போன்றும், உயிரணு போன்றும் உருவானதொரு கவிதை என்னும் முழுப்பொருளைத் தரும். மேலும் வளர்ச்சிக்கும் விரிவுக்கும், ஒரு கருவுக்கு உள்ளிருக்கும் இன்னொரு கவிதைக் கருவைக் காண்பதற்கும் ஹைக்கூ என்ற சொல் சிறப்பாக அமைந்திருப்பதைக் காணலாம்.
ஆரம்ப காலத்தில் ஹைக்கூ கவிதை ஹொக்கூ என்றே அழைக்கப்பட்டது. பிறகு ஹைகை என்று திரிந்து ஹைக்கூ என்றாயிற்று. ‘Haiku’ என்ற சொல்லுக்கு இணையாகத் தமிழில் ஹைகூ, ஹைக்கூ, ஹைய்கு, ஹொக்கு, அய்க்கூ, ஐக்கூ என்ற சொல்லாட்சிகளும், அதன் வடிவத்தைச் சுட்டும் வண்ணம் துளிப்பா, குறும்பா, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா, மின்பா, அகத்தியக் கவிதை, கடுகுக் கவிதை, குட்டைக் கவிதை, குறுங்கவிதை, நறுக் கவிதை, மத்தாப்பூக் கவிதை, மின்மினிக் கவிதை, வாமனக் கவிதை முதலான பெயர்களாலும் அடையாளப்படுத்தப்படுகிறது. இன்று ஹைக்கூ என்ற சொல்லாட்சியே தமிழ் இலக்கிய உலகில் இடம்பெற்றுள்ளது.
ஹைக்கூ வாசிப்பு முறை:
*****************************
ஹைக்கூவை முறையாக எப்படி வாசிக்க வேண்டும் என்ற புரிதல் ஹைக்கூ எழுதுபவர்களுக்குக் கூட தெரியாமல் இருப்பது வினோதமானது. 3 அடிகள் கொண்ட ஹைக்கூவை முதல் இரண்டு அடிகளை தொடர்ந்து படித்து நிறுத்த வேண்டும் (மூன்றாவது அடியைப் படிக்கக் கூடாது). மூன்றாவது அடி என்ன சொல்லவரும் என்று சிந்தனையில் மூழ்க வேண்டும்... மீண்டும் முதல் இரண்டு அடிகளை படித்து நிறுத்தி மூன்றாவது அடியைப் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும் போது அந்த இறுதி அடி நாம் சிந்தித்த கருத்தைப் பிரதிபலிக்காது எதிர்பாராதத் திருப்பம் கொண்டதாக இருக்க வேண்டும்.
ஹைக்கூவும் வாசகனும்:
****************************
ஹைக்கூ ஒரு காட்சியைக் காட்டுகிறது. அதைப்பற்றிச் சொல்வதில்லை. அதன் விளைவான உணர்ச்சிகளையும் சொல்வதில்லை, படிப்பவரின் கற்பனைக்கே அவைகளை விட்டுவிடுகின்றது.
எழுதும்போது கவிஞனுக்கும் கருப்பொருளுக்கும் ஒரு சிறு இடைவெளிகூட இல்லாமல் எண்ணங்களைக் கலையவிடாமல் நேரடியாகச் சொல்லும்போது கவிஞனின் உணர்வுக்கும், வாசகனின் மனதிற்கும் கவிதை ஒரு பாலமாக அமைந்து நேரடித் தொடர்பை உண்டாக்கிவிடுகிறது.
கவிஞனின் எண்ணம் முழுவதையும் ஹைக்கூ வெளிப்படுத்துவதில்லை, ஹைக்கூ கவிதைகளைப் புரிந்துகொள்வதில் வாசகனுக்கு மிகப்பெரிய பங்குண்டு ‘ஹைக்கூ ஒரு பொருளை சுட்டிக் காட்டுவதோடு நின்றுவிடும், வாசகனே அதில் மறைந்திருக்கும் உணர்ச்சிகளைத் தேடித் துருவிக் கண்டுபிடித்து சுவைக்க வேண்டும்.
மேலும், ஈரோடு தமிழன்பன் அவர்கள் ‘ஹைக்கூ முழுமையானதாகவோ, தெளிவான கருத்துத் தெறிப்புடனோ இருந்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வாசகன் தனது கைவசம் கொஞ்சம் வார்த்தைகளை வைத்துக் கொண்டு ஹைய்குவைப் படிக்க வேண்டும். அவை தேவைப்படலாம். அவன், தனது அனுபவங்களையும், அனுமானங்களையும், கற்பனைகளையும் எடுத்துக் கொண்டு சென்றால், தானும் படைப்பாளியோடு ஒரு பங்குதாரராகிப் பயனை இதயக்களத்தில் வரவு வைக்கலாம். வாசகனும் கவிஞனோடு சேர்ந்து ஹைய்குவை மணந்துகொண்டு அவனுக்கு ஒரு விதத்தில் சகலையாகி விடுவதைத் தவிர வேறு வழியில்லை’ (தமிழன்பன், சூரியப் பிறைகள், ப.10.) என்று குறிப்பிடுவதிலிருந்தும் ஹைக்கூ கவிதையைப் புரிந்து பொருள் கொள்வதில் வாசகன் எந்த அளவுக்கு இன்றியமையாதவனாக விளங்குகின்றான் என்பதை உணரலாம்.
ஹைக்கூவில், நாம் காட்டும் காட்சி அல்லது நிகழ்ச்சி இயற்கையைப் பற்றி, மனிதனைப் பற்றி, வாழ்க்கையைப் பற்றி ஓர் அரிய உண்மையை உணர்த்துவதாக, வாசகன் உள்ளத்தில் ஒளியேற்றுவதாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ஹைகூ எழுத வேண்டிய அவசியமில்லை (அப்துல் ரகுமான், சோதிமிகு நவகவிதை, ப.44.) என்பார் அப்துல் ரகுமான்.
தமிழ்நாட்டு ஹைக்கூக்கள் பெரும்பான்மையும் ஒற்றைப் பரிமாணத்தில்தான் வருகின்றன என தன் வருத்தத்தைப் பதிவுசெய்வார் கோவை ஞானி.
ஹைக்கூவில் நாம் கடைபிடிக்க வேண்டிய முக்கிய மரபுகள்: ********************************************************************
1. ஹைக்கூவில் முதல் இரண்டடி ஒரு கூறு. ஈற்றடி ஒரு கூறு. ஹைக்கூவின் அழகும் ஆற்றலும் ஈற்றடியில்தான் உள்ளது. ஈற்றடி ஒரு திடீர் வெளிப்பாட்டை, உணர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி முழுக் கவிதையையும் வெளிச்சப்படுத்த வேண்டும்.
3. உயிர் நாடியான ஈற்றடியில் ஆற்றல் மிக்க வெளிப்பாட்டிற்காகப் பெயர்ச் சொல்லையே பயன்படுத்த வேண்டும்.
4.ஹைக்கூவுக்குத் தலைப்பிட்டு எழுதக் கூடாது. ஒரு ஹைக்கூவிற்கு இரண்டுக்கு மேற்பட்ட அல்லது குறைந்த பட்சம் இரண்டு உட்கருத்தாவது (குறியீடு போல; உட்பொருள்) இருக்க வேண்டும். ஹைக்கூவுக்குத் தலைப்பிடக் கூடாது என்பதற்கான காரணம் இதுதான்: தலைப்பைத் தாண்டிச் சிந்திப்பதைத் தடை செய்கிறது. ஒரு ஹைக்கூவின் உட்பொருள் (குறியீடு போல்) விரிந்து செல்வதாக இருக்க வேண்டும். ஒரு உண்மையான ஹைக்கூ குறைந்தபட்சம் இரண்டு உட்பொருளையாவதுத் தாங்கி நிற்பது சிறப்பு.
ஹைக்கூ கவிதையின் பண்புகள்:
**************************************
ஹைக்கூ கவிதைகளைக் குறித்து முனைவர் பட்டத்துக்காக ஆராய்ந்த நிர்மலா சுரேஷ் அவர்கள் ஹைக்கூவின் பண்புகளாகப் பின்வருவனவற்றை எடுத்துரைக்கிறார். இக்கருத்துக்கள் ஹைக்கூ கவிதையை புரிந்துகொள்ள பெரிதும் உதவும்.
- ஹைக்கூ கற்பனையை ஏற்காது.
- ஹைக்கூ உவமை, உருவகங்களைப் பயன்படுத்தாது.
- ஹைக்கூ உணர்ச்சியை வெளிப்படையாய்க் கூறாது.
- ஹைக்கூ தன்மைப் பாங்கினைத் தவிர்க்கும்.
- ஹைக்கூ கவிதைக்குள்ளே ஒரு சொல் மட்டும் குறியீடாய்ப் பயின்று வருதல் இல்லை. ஹைக்கூ இருண்மையை மேற்கொள்ளாது.
- ஹைக்கூவில் நுண்பொருண்மை இல்லை.
- கவிஞன் தன் கருத்தை ஏற்றிச் சொல்லாமை.
- பிரச்சாரமின்மை.
- எளிமையாகக் கூறுவது.
- சொல்லுவதைக் காட்டிலும் சொல்லாமல் விடுவது.
- சின்ன உயிர்களையும் சிறப்பித்துப் பாடுவது.
- மின்னல் என வரும் ஈற்றடி அமைப்பினைக் கொண்டதாக இருப்பது.
- மெல்லிய நகைச்சுவையுணர்வு இழையோடியிருக்கும்படி அமைவது.
- இயற்கையைப் பாடுவதுடன் இயற்கையை மனித உணர்வுகளோடு இணைத்துப் பாடுவது. ஆழ்மன உணர்வுகளும் மெல்லிய சோகமும் இழையோடும்படி அமைவது.
- பிற உயிர்களைத் தனக்கு இணையாக மதித்துப் பாடுவது.
- மூன்றடிகளால் பாடுவது.