தைமகளே வருக...(பொங்கல் கவிதை போட்டி)
தை மகளே உன்னை வரவேற்க ........
புத்தாடைகள் புனைந்து
முகத்தில் மகிழ்ச்சி பொங்க
எங்கள் வீட்டுப்பிள்ளைகள்
ஆவலுடன் வாசலில் தவமிருக்கின்றனர் .
கிராமத்து ஆண்களும் பெண்களும்
புது பானையில் பொங்கல் வைக்க
ஆனந்தமாய் அலைந்து கொண்டிருக்கின்றனர் .
நகரத்து மக்களோ
தொலைக்காட்சியில் என்னென்ன நிகழ்ச்சியென்று
முன்னமே குறித்து கொண்டு
ஆவலாய் அவசரகதியில் தயாராகின்றனர் .
உழைக்கும் வர்க்கமோ
நிம்மதியாய் நித்திரையில் லயிக்க
உன்னை வரவேற்க கனவில் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
எழுத்து பிரியர்களோ
உன்னை மொழியால் அழகுபடுத்த
சொற்களை தேடிக்கொண்டிருக்கின்றனர் .
தை மகளே ! எல்லோர்
விருப்பமும் நிறைவேற
உள்ளத்திலும் உணர்விலும்
நல்லதே நிலைக்க
சீக்கிரம் வந்து விடு !