காலம் பதில் சொல்லுமா?.............அம்மா

எத்தனை வருடம் தாங்கி நின்றேன்
உன் வரவிற்காக தவம் இருந்தேன்
உன்னுள் என்றுமே நான் இருப்பது போல்
எத்தனை ஆண்டுகள் நினைத்திருப்பேன்
எதையெதையோ நினைத்து
என்னுள்ளே நான் தொலைந்து நின்றேன்
இன்றும் அதுபோல் தான் இருக்கிறேன்
கற்பனை செய்து பார்க்க இயலாத
கலியுகத்தில்
காலம் பதில் சொல்ல காத்திருக்கும்
அநாதை சிறுமி ..............

எழுதியவர் : கஸ்தூரி (12-Jan-13, 7:33 pm)
சேர்த்தது : மகாகஸ்தூரி
பார்வை : 252

மேலே