எனக்கு வந்த குறுஞ்செய்திகள்

(1) சிரிப்பு என்பது மின்சாரம் மற்றும்
வாழ்க்கை என்பது மின்கலம் .
சிரிப்பு என்ற மின்சாரத்தை வாழ்க்கை என்ற மின்கலத்தில் ஏற்றினால்
வாழ்க்கை என்பது வரமாக மாறும் ..
ஆகவே சிரியுங்கள் சிரியுங்கள்

(2)ஒருவன் : உனக்கு தெரியுமா உலகிலேயே மிகப்பெரிய "wall " எது?
மற்றொருவன் : china wall ... இல்ல டா உங்க அம்மா சொன்னாங்க நீ தா உலகத்திலேயே மிக பெரிய வால்னு..

(3) புன்னகை என்ற முகவரி
உங்கள் முகத்தில் இருந்தால்
நண்பர்கள் என்ற கடிதங்கள்
உங்களை எளிதில் வந்தடையும்

(4) இரவு என்பது தூங்குவதற்க்கு மட்டுமல்ல ..
இன்றைய துன்பங்களை மறப்பதற்கும்..
மகிழ்ச்சியான தருணங்களை கனவில் கொண்டுவருவதற்கும்
நாளைய மகிழ்ச்சியை வரவேற்ப்பதற்க்கும் தான்.

(5) காதலும் மரணமும் அழையாத விருந்தாளிகள்
யாருக்குமே தெரியாது
யாருக்கு எப்போது வருமென்று
ஆனால் இரண்டுமே செய்வது
ஒரே வேலையை தான்
ஒன்று இதயத்தை எடுத்துக் கொள்ளும்
இன்னொன்று இதய துடிப்பை எடுத்துக்கொள்ளும்.

(6) அமைதியும் & சிரிப்பு சிறந்த கருவிகள்
சிரிப்பு எல்லா துன்பங்களையும் தீர்த்துவிடும்
அமைதி எல்லா துன்பங்களையும் விலக்கி விடும்.

(7) நாக்கு 6 இஞ்ச் நீளமிருக்காது-ஆனால்
6 அடி மனிதனை கொல்லும் ஆற்றல் வாய்ந்தது.
ஆகவே யோசிச்சு பேசுவோம் ... யாரையும் புண்படுத்தாமல் ...

(8) மனமென்பது நமது நெருங்கிய நண்பன் அதை நீ உன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் -அதே
மனம் தான் நமது நெருங்கிய எதிரி உன்னால் கட்டுப்படுத்த முடியாமல் போனால் ..

(9) மண்ணில் விழுவதில் தப்பில்லை ஆனால் விழும்போது விதையாக விழவேண்டும்..
எழும்போது மரமாக எழவேண்டும்

(10) நீ உயர்ந்திருக்கும் போது உன் நண்பர்களுக்கு நீ தெரிவாய் ... ஆனால் நீ தாழ்ந்திருக்கும் போது உன் நண்பர்களை கண்டுக்கொள்வாய்..

டிரிங் டிரிங் .... SMS

எழுதியவர் : (20-Jan-13, 12:53 pm)
பார்வை : 94

மேலே