^^^^^^^ நதிகள் இணைந்தால் ^^^^^^

பாவங்கள் தீர்த்திடும்
கங்கைநதி - மக்கள்
தாகங்கள் தீர்த்தருள்
புரியுமம்மா !
பயிர்மேனி பருத்திங்கு
செழித்திருக்க - மக்கள்
பட்டினிச் சாவுகள்
ஒழியுமம்மா ........


காடுகரை எல்லாம்
விளைந்திருக்க - அருமை
நாடு நகரெல்லாம்
ஜொலிக்குமம்மா !
கேடு கோடுயாவும்
மறைந்தெங்கும் - வறுமை
பாடு படலங்கள்
சிதையுமம்மா .........


காவிரி நீருக்கு
கையேந்தா - தமிழர்
கனவுகள் மெய்தனைக்
காணுமம்மா !
கனவாய்ப் போன
மின்சாரம் - கண்டு
காணி ஒளிமயம்
ஆகுமம்மா .........


நிலத்தடி நீர்வளம்
நிலைத்திருந்து - எங்கும்
ஆழ்துளை கிணறுகள்
குறையுமம்மா !
நீர்வழிப் பாதைகள்
நீண்டுவந்து - நாட்டின்
மீன்பிடித் தொழில்களும்
மிளிருமம்மா !

பாருக்குள்ளே நல்ல
நாடென்ற - பாட்டன்
பாரதியின் பாடல்
பலித்திருக்க !
பசுமைப் புரட்சி
படர்ந்துநின்று - பாரில்
பாரதத்தின் புகழ்
பாடுமம்மா .........

கோதாவரி கிருஷ்ணா
பெண்ணாறு - கங்கை
காவிரி வையை
துங்கபத்ரை !
நாகார்ஜுனா சாகர்
பிரம்மபுத்த்ரா - சேர
நாடுவளம் நலம்
காணுமம்மா.................................

எழுதியவர் : ஈஸ்வர் தனிக்காட்டுராஜா..... (25-Jan-13, 1:20 pm)
பார்வை : 351

மேலே