இது காதல் செய்யாத நேரம் ! (தனிக்காட்டுராஜா)
கவிதையில்
நாட்டமில்லை
கனவுகளின்
ஓட்டமில்லை !
தனிமையை
அசைத்துவிடும்
தழுவும்தென்றல்
ரசித்திடவும் ,
உணர்சிகள்
பட்டுப்போன
உயிரற்ற
மோனநிலை ....
விழிகளில்
விழிப்புண்டு
விளங்காதத்
தவிப்புண்டு !
எதுவென
அரியயெண்ணி
எத்தனித்தும்
புரியாத,
மனமது
மரித்துவிட்ட
மந்தமான
மாயநிலை ........
காட்சிகளின்
தூரம் - இது
காதல்செய்யா
நேரம் ........................