இது காதல் செய்யாத நேரம் ! (தனிக்காட்டுராஜா)

கவிதையில்
நாட்டமில்லை
கனவுகளின்
ஓட்டமில்லை !

தனிமையை
அசைத்துவிடும்
தழுவும்தென்றல்
ரசித்திடவும் ,

உணர்சிகள்
பட்டுப்போன
உயிரற்ற
மோனநிலை ....

விழிகளில்
விழிப்புண்டு
விளங்காதத்
தவிப்புண்டு !

எதுவென
அரியயெண்ணி
எத்தனித்தும்
புரியாத,

மனமது
மரித்துவிட்ட
மந்தமான
மாயநிலை ........

காட்சிகளின்
தூரம் - இது
காதல்செய்யா
நேரம் ........................

எழுதியவர் : ஈஸ்வர் தனிக்காட்டுராஜா..... (31-Jan-13, 8:31 pm)
பார்வை : 275

மேலே