கோலத்தில் தேடிடும் காலங்கள்
வயதில் போட்டக் கோலங்களை
வயதாகியும் மறவாத காரணத்தால்
பரப்பிட்ட அரிசியில் தேடிடும் ஆத்தா
வரப்பினில் நடந்திட்ட உன் பாதங்கள்
வாய்க்கால் நீரில் கழுவிட்ட கைகள்
நடந்திட்ட பசுமைப் பாதைகளையும்
கடந்திட்ட காலச் சுவடுகளையும்
இதயத்தில் மோதிடும் அலைகளாய்
இமைகளில் நின்றிடும் நீர்த் துளிகளாய்
நினைவில் வந்திடும் வாழ்ந்த நாட்கள்
அழுத்திடும் நெஞ்சை அறிந்திட்ட நானும்
அழுகிறேன் நினைத்து அந்தக் காலமும்
மீண்டும் வாராதோ மீட்டிட தமிழனை
வீழ்ந்திடும் தமிழ் வாழ்ந்திட வையகத்தில் !
பழனி குமார்