தேடுதலை விடவும்உருவாக்குதல் செம்மை
தேடித்தேடிஅலையும்
பழம்பாதை,
தெரிந்தே ..தொலைந்து,
போகுமடா...!
தெளிந்தபின்செதுக்கும்
புதுப்பாதை ,
நினைவின் நிகழ்வாய் ,
நின்று வழி,
சொல்லுமடா...!
பாதை தேடித்தேடி
அலைந்து திரிதல்
காலத்தின் விரயம்.
அன்றியும் ,
தெளிந்து அமைக்கும்,
புதுப் பாதைப்பயணம்,
உற்சாகத்திலும் ...
பெருமிதம்,
உற்சாகப்பெருமிதம்!
.................................................