விதை இப்போ மரமாச்சு!

தன் மகன் குழந்தையாய் இருக்கும்போது போட்ட விதையில் முளைத்த மாமரத்தினடியில் அந்த தாய் உணவு உண்டு களைப்பாறும்போது,..........

மாமரமே உன்னை பாத்தா
மகனோட ஞாபகந்தான்!
சின்னதா விதை போட்டானே
சிறுபிள்​ளை அவனுந்தான்!

நீ மண்ணுல காலூனி
மானத்தை பாப்பதுபோல்
இந்த ஊர்ல பொறந்த எம்புள்ள
படிக்கறான் வெளி ஊர்ல!

நல்ல குணம் அவனுக்கு
உன் பச்ச இலைபோல!
அறிவும் பழுத்திருக்கு
உன்னோட மாம்பழம்போல!

உலகம் தெரிஞ்சிருக்கு
நான் பெத்த ஒத்தபுள்ள!
என் மனசு நெறஞ்சிருக்கு
காய்ச்ச இந்த மரம்போல!

வெய்யில்ல வேல பாத்து
பள்ளிக்கு நான் சேத்தேன்!
இத்தனை நாள் இருண்டாலும்
இப்ப என்வாழ்வு வெளிச்சமாச்சு!

சின்னதா விதைபோட்டு
நீயும் காத்திருந்தா!
பெருசா புகழ்சேரும்
காயத்துக்கு அருமருந்தா!

களைப்பா இருக்குன்னு
சாஞ்சேன் வேர்மேல!
நிம்மதிய நான் கண்டேன்
எம்புருசன் மார்போல!

எழுதியவர் : Cheers Chandru (12-Feb-13, 11:05 am)
சேர்த்தது : cheerschandru
பார்வை : 100

மேலே