" எனது காதல் கதை "

"இரு விழியில் காதல் தேன் சொட்ட,
ஒரு நாள் என்னை
வழி மறைத்தால் அவள் .. ! இதழோ
சில நிமிடம் மௌனம்,
அவள் சொல்ல நினைத்ததை அறிந்து
கொண்டது என் மனம் ..!


பெண்மை பேசியது காதல் மொழி அவள்
கண்-இமையில் தெரிந்தது
உண்மையான அன்பின் வலி ..!

சற்று அருகே வந்து ஐ லவ் யு என்றால் ,
அன்று தலைகீழாய்
தெரிந்தது என் கல்லூரி வளாகம் ..!
அந்நாள் முதல் அவள்
மட்டுமே ஆனால் எந்தன் உலகம் ..!

தொலைபேசி என் வீடானது ..
அவள் பேச்சு உணவானது ...
இரவு விடிவது தெரியவில்லை .
பகலோ முடிவது புரியவில்லை ..

அன்று அவளிடம் சொன்னேன் ஆழமான
உன் அன்பால்,
ஆழ் மனதில் உந்தன் நினைவால்
அடிமை ஆனேனடி உனக்கென்று..!

அதற்க்கு அவள் சொன்னால் நீயின்றி
நானில்லை, நாம் சேர
இனி யாவரும் தடையில்லை.. என்றுமே
என் உடலும் , உயிரும்
என்னுரிமை காதலனுக்கென்று..!

காலம் போனது என் காதல் கானல்
நீரானது .. காரணம்
சொல்லாத அவளின் பிரிவு
வலி தந்தது .!
எனது காதல் பாடத்தில் அவளது
பக்கங்கள்
நினைவோர சுமையானது ...!

இங்கு ஏமாற்றப்பட்டது நானே
ஏமாற்றியது அவளே ..!

சில நாள் காதலை வெறுத்தேன்
ஏன் காதல்
பாடலையும் கேட்க மறுத்தேன்,

பல நாள் விரக்கதியில் பயணம்
பாதை மாறி
போகும் நேரத்தில் நண்பர்கள்
என் மீது கவனம் ..!

நண்பர்களுடன் கேலி கிண்டல்
பேசிய படி .. அவள்
நினைவை சிறுக சிறுக மறந்தேன்
எல்லா பெண்களும்
அவள் போல் இல்லையென்று
என் மனதில்
எண்ணத்தை விதைத்தேன் ..!

இன்றோடு இரண்டு வருடம்
முடிந்தது.. ஆனாலும்
அவ்வப்போது ஏதோ ஒரு செயல்
அவள் நினைவை
தீண்டுது ..!

அன்றைய காதலர் தினத்தில் அவள்
தந்த சில முத்தங்கள்
இன்றைய நாளின் தாக்கங்கள் ..
ஏனோ நாளைய
தினத்தின் ஏக்கங்கள்..!


.....Happy valentine 's day ....

எழுதியவர் : dhamu (13-Feb-13, 1:21 pm)
பார்வை : 232

மேலே