கவிதையே தமிழ் தாகம் ஊட்டு

தமிழ் வார்த்தைகள்,
தடுமாறி முன் நடந்தாலும்
தடம் மாறா திசையில்
நடப்பது கவிதையில் தான்...

அந்த கவிதை என்னும் தளத்தை
தலைமுறைகளும் தலை நிமிர்த்த,
அவர்களுக்கு,தமிழ் தாகம் தனை
ஊட்டி வளர்த்தாக வேண்டும்....
தமிழ் மக்கள்,அவர்களை
முகவரிக்கும் 'தமிழ்' என்ற
வார்த்தைக்கு அகராதியை தேடி செல்லும்
அவமானத்தை தவிர்க்க...!!!!

எழுதியவர் : மௌன இசை (17-Feb-13, 1:54 pm)
பார்வை : 178

மேலே