எப்போதும் பசியோடு இருங்கள் !?

இன்று உலகையே கலக்கி கொண்டிருக்கும் ஆப்பிள் நிறுவனத்தை முதன் முதலில் தொடங்கியவர் (Steven Paul) இறக்கும் தருவாயில் கூறிய‌ கடைசி வார்த்தைகள்.

இது தான் உன் கடைசி தினம் என்பது போல் தினமும் நீ வாழ்ந்தால்,வாழ்க்கையின் பூரணத்துவத்தை உணரலாம்.சிறு வயதில் நான் படித்த‌ இந்த‌ வாக்கியம் என் மனதில் ஆழ‌ பதிந்து விட்டது. நீங்கள் இறப்பது முன்னாலேயே தெரிந்து விடும் போது இழப்பதற்கு இனி ஒன்றுமே இல்லை என்பது புரிந்து விடுகிறது. நிர்வாணமாக‌ இருப்பதை போல் உணர்கிறோம் .

உங்கள் வாழ்க்கை மிகச்சிறியது உங்களுக்காகவே அதை வாழுங்கள். துருபிடித்த‌ சித்தாந்தங்களுக்காக‌ வாழ்க்கையை வீணாக்காதீர்கள்.அடுத்தவர்களின் கருத்துச் சத்தங்கள் உங்கள் உள்ளுணர்வின் சத்தத்தை நீர்த்து போக‌ செய்ய‌ அனுமதிக்காதிர்கள். முட்டாள் தனத்திலிருந்து தான் புத்திசாலித்தனம் பிறக்கிறது.அதனால் எப்போதும் பசியோடு இருங்கள்.எப்போதும்

முட்டாளாக‌ இருங்கள்.உங்கள் இதயமும் உள்ளுணர்வும் உங்களை வழி நடத்தட்டும்.

எழுதியவர் : நான் படித்தது (21-Feb-13, 6:17 pm)
பார்வை : 258

மேலே