கைப்புள்ள. 24

சாமியும்,சாதியும்.


உயிர கொடுத்த
சாமிக்கெல்லாம்
மயிரக்குடுக்கிறான்.

உயிர எடுக்கும்
சாதிக்கெல்லாம்
உயர்வ கொடுக்கிறான்.

நல்லது கெட்டது
தெரியாம
ஞாயம் பேசுறான்.
நம்பி நம்பி
தினந்தோறும்
மோசம் போகுறான்.

தமிழா!
கட்ட தொரயா இரு.
கைப்புள்ளையா இரு.
ஆனா
எடுப்பார் கைப்புள்ளையா
மட்டும் இருக்காத.
சிந்தி !

ஜே.ஜி.ரூபன்.
22.02.13

எழுதியவர் : ஜே.ஜி.ரூபன். (22-Feb-13, 11:05 pm)
பார்வை : 108

மேலே