கொடுமை....கொடுமையிலும் கொடுமை !!

ரத்த தானம் என்பது ரத்தம் தேவைப்படுவோருக்கு ஒருவர் ரத்தம் கொடுத்து உதவுவதாகும்.

இல்லாத ஒருவருக்கு இருக்கும் ஒருவர் கொடுத்து உதவும்போது அங்கு தேவை நிறைவடைகிறது. இதனைத்தான் தானம் என்கிறோம்.

ரத்தம் என்பது யாருக்கும், எப்பொழுது வேண்டுமானாலும் தேவைப்படலாம். விபத்து, அறுவை சிகிச்சை, நோய் என எந்த காரணத்திற்காகவும் ரத்தம் தேவைப்படலாம்.இப்படி உயிரை காக்கும் ரத்தத்தை இது போன்ற செயலுக்கு வீணக்கலாமா??

ஒரு வருடமாக தன் உடம்பில் இருந்து 6.5 லிட்டர் ரத்தத்தை எடுத்து அதை உறைய வைத்து தமிழக முதல்வரின் உருவத்தை செய்து இருக்கிறார்.இந்த 6.5 லிட்டர் இரத்ததை இவர் தானம் செய்திருந்தால் குறைந்தது 15 உயிருக்காவது உதவியாக இருந்திருக்கும்.

ரத்தத்தால் காதலியின் பெயரை எழுதுவது,கடிதம் எழுதுவது சிலை வடிப்பது இது எல்லாம் முட்டாள் தனமான செயல்.

உயிர் காக்கும் குருதியை வீணாக்காதீர்கள்.

எழுதியவர் : தினேஷ்ராக் (25-Feb-13, 1:21 pm)
பார்வை : 323

மேலே