காதலும் மரணம்தானே !

மெல்ல தனியே
நடக்கும்போதெல்லாம் 
காற்றுடன் சேர்த்து - உன்
நினைவுகளும் கை கோர்த்து
அந்த மழை காலங்களை 
அசைபோடுகிறது...

வெகு தூரத்தில் நீ.
விலக முடியாத நெருக்கத்தில்
நம் நினைவுகள்....

கை பிடித்தவள் 
அருகே இருக்கும்போது
நினைவுகள் மட்டும்
வெகுதூரத்தில் மேய்கிறதே !

என்ன செய்ய
வாழ்கையில் 
ஒரே ஒரு முறைதானே
 காதல் மரணம் வருகிறது !

எழுதியவர் : கிருஷ்ணமூர்த்தி (25-Feb-13, 8:04 pm)
பார்வை : 112

மேலே