நூலகம் ...

*கலைமகள்
விலை மகள் போல்
வேடம் போட்டாலும் ..
வந்து
கரம் பிடிக்க
ஆள் இல்லை
தமிழா ..

*அமுத சுரபிக்கே
அம்மா இவள் .

* கோடிகணக்கான
அறிவாளிகள்
தூங்கி விட்டார்கள்
எழுப்ப ஆள் இல்லாமல் .

*புத்தகத்தில்
ஒரே
ஒரு பக்கத்தை மட்டுமாவது
படித்து வையுங்கள் ..
மீதம் ...உங்கள் ..
வருங்காலம் வாசித்து விடும் .

எழுதியவர் : திண்டுக்கல் சாமீ (28-Feb-13, 4:45 pm)
சேர்த்தது : Dindigul samy
பார்வை : 102

மேலே