...........பூவும் நீயும்.........

பூக்களுக்கு விடைகொடுக்கவேண்டிய கட்டாயம்,
என் வாழ்க்கைக்கு வந்திருக்கிறது !
ஆகையினால் உன்னையும் பிரியவேண்டிய நிபந்தனை !
இனி எனக்கு கிடைக்காது !
உன் அழகும் கருணையும் அன்பும் நறுமணமும் !
இழந்தவன் என்பதைவிடவும்,
உன்னோடு இருந்தவன் என்பதே பெரும்பேறு எனக்கு !
காதல் கடந்துபோகிற நதி அல்ல !
மனதை செப்பனிடும் விதி !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (6-Mar-13, 7:40 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 67

மேலே