2, ரசித்த கவிதை

மகளிர் தின நல வாழ்த்துக்கள் ..
தோழிக்காக எழுதிய கவிதை ...
இன்று நம் பெண்மை தோழமைகளுகாக...

உணர்வுகளோடு பேசும் பெண்ணே
உணர்ந்து சொல்கிறேன் கேளேன் கண்மணி !
வஞ்சகர் இருக்கும் உலகத்தில்
நல்லவரும் உள்ளனரடி !


நீ கடந்து வந்த பாதை முள்ளாக இருந்தாலும் இனி
நீ கடக்கும் பாதை யாவும் நந்தவனமாய் மாறுமே !
நல்ல இருதயங்கள் வாழும் உலகில்
வஞ்சகரை கண்டு அஞ்சாதே பெண்ணே!

தற்காப்பு என்ன தற்காப்பு
தன்னம்பிக்கை தானே தற்காப்பு !
தற்காப்பு கற்றவர்கள் தன்னம்பிகை இழந்து பயன் என்ன !
தற்காப்பு கலை கற்பிக்கும் பெண்ணிற்கு தைரியம் தொலைந்தது ஏனோ !
கால தேவன் காட்டிய கோலம்தானோ!

பெண்ணே பெண்ணிற்கு எதிரிய உளரே ..
களை எடுப்போம் நமக்குள்ளே !
கைகொடுப்போம் நமக்கிடையே !
பாவைகளின் நேர்கொண்ட பார்வை கண்டே பாவிகள் அஞ்சி நடுங்கிடவே
பாரில் வாழ்ந்திடுவோம் நாமே !

சகோதரத்துவம் அழியவில்லை
நட்பும் அழியாது
காதல் அழிவதில்லை
தாய்மைக்கு ஈடு எதுவுமில்லை ...
இந்த பாசம் நேசம் இருக்கும்வரையில் நாமும் வாழ்வோம் தோழி !

பெண்ணே விழித்திரு ! எழுந்திரு !
உன்னை மடி ஏந்தும் அன்னையாக நான் வருவேன்!
என் தோள் சாய தோழியாக உன்னை அழைப்பேன் !
உன் அச்சங்களை களைந்துவிட்டு வா வா பெண்ணே என் அருகிலே !
எதிர்மறை எண்ணம் வேண்டாம் தோழி!
மென்மையோடு மேன்மையாக வாழ்வோம் வாராய் தோழி ...


எழுதியவர் : பிரியா சந்திரன்

எழுதியவர் : (8-Mar-13, 12:53 am)
சேர்த்தது : கதிஜா
பார்வை : 185

மேலே