அர்த்தமற்ற ஆசைகள் ..!
குழம்பிய குட்டைக்குள் -உன் முகத்தை
தேட நினைப்பதும் ....!
ஒளிகுறைந்த விளக்கைக்கொண்டு...
இருளை நீக்க நினைப்பதும் ..!
உரசாத கற்களில் தீயை வரநினைப்பதும் ...!
உழைக்காத மனிதனிடம் உயர்வை எதிர்பார்ப்பதும்..!
முயற்சியில்லாத மனிதனிடம் புதுமையை எதிர்பார்ப்பதும் அர்த்தமில்லாத ஆசைகள் ...!