அர்த்தமற்ற ஆசைகள் ..!

குழம்பிய குட்டைக்குள் -உன் முகத்தை
தேட நினைப்பதும் ....!

ஒளிகுறைந்த விளக்கைக்கொண்டு...
இருளை நீக்க நினைப்பதும் ..!

உரசாத கற்களில் தீயை வரநினைப்பதும் ...!

உழைக்காத மனிதனிடம் உயர்வை எதிர்பார்ப்பதும்..!

முயற்சியில்லாத மனிதனிடம் புதுமையை எதிர்பார்ப்பதும் அர்த்தமில்லாத ஆசைகள் ...!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (10-Mar-13, 12:59 pm)
பார்வை : 179

மேலே