ஒரு நாள் தொழுகை
தொழுகைக்கு நேரமில்லை நமக்கு -இதை
மறந்து நாம் வாழுகின்றோம் என்ன கணக்கு
பாங்கோசை காதினிலே கேட்டாலும் -நல்ல
பர்லை முடிக்க நேரமில்லை இது வழக்கு
துனியாவின் வாழ்வு நமக்கு சுதந்திரம் -இனி
தூங்கி எழுவோமா ? இல்லை நிரந்தரம்
சந்தூக்கில் தூக்குமுன் நாம் தெளிவு கொள்வோம்
சொல்லி வராது நிரந்தர தூக்கமிது
படைத்தவனுக்கு என்ன செய்தோம் சிந்திக்கணும்
போன நாள் திரும்பாது தெரிசுக்கணும்
மறுமையில் கேள்வி கணக்கு இருக்கு -இது
படைத்தவன் முன் மலக்குகள் கணக்கு
வணக்கங்கள் எல்லாமே படைத்தவனுக்கு
வணங்கி நின்று கேட்டிடுவோம் துவா இன்று
கவிஞர்.இறைநேசன்