ஒரு நாள் தொழுகை

தொழுகைக்கு நேரமில்லை நமக்கு -இதை
மறந்து நாம் வாழுகின்றோம் என்ன கணக்கு

பாங்கோசை காதினிலே கேட்டாலும் -நல்ல
பர்லை முடிக்க நேரமில்லை இது வழக்கு

துனியாவின் வாழ்வு நமக்கு சுதந்திரம் -இனி
தூங்கி எழுவோமா ? இல்லை நிரந்தரம்

சந்தூக்கில் தூக்குமுன் நாம் தெளிவு கொள்வோம்
சொல்லி வராது நிரந்தர தூக்கமிது

படைத்தவனுக்கு என்ன செய்தோம் சிந்திக்கணும்
போன நாள் திரும்பாது தெரிசுக்கணும்

மறுமையில் கேள்வி கணக்கு இருக்கு -இது
படைத்தவன் முன் மலக்குகள் கணக்கு

வணக்கங்கள் எல்லாமே படைத்தவனுக்கு
வணங்கி நின்று கேட்டிடுவோம் துவா இன்று

கவிஞர்.இறைநேசன்

எழுதியவர் : ஸ்ரீவை.காதர் (10-Mar-13, 6:00 pm)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 93

மேலே