மதம். . . . .

மதம் பிடித்து மனிதர் கூட்டம்
மாக்களாய்த் திரிவதேன் ?
மதம் காட்டும் மார்க்கம் விட்டு - தனி
மார்க்கமாக அலைவதேன் ?

மதத்தின் பெயரால் கொடுமை புரிந்தே
மனித நேயம் காக்க மறந்தே
மாற்று வழியொரு மார்க்கம் கண்டே
மதி மயங்கித் திரிவதேன் ?

மதத்தை போற்றும் மனிதர்காள்
மனிதம் காக்க மறப்பீரோ
மதம் ஒன்றே மார்க்கம் என்ற
மயக்க நிலையினை அறுப்பீரோ ?

மதத்தின் மயக்க நிலையறுத்து
மனிதம் காக்கும் வழிவகுத்து
பகுத்தறிவுப் பகலவனாய் - மத
வினைகள் களைந்திடுவோம்

மதத்தை விட்டு மதத்தை விட்டு
மனித வேற்றுமை களைந்து விட்டு
மனிதர் எல்லாம் ஓர் முகமாய்

மனிதம் காத்து வாழ்ந்திடுவோம்
மக்கள் பன்பு போற்றிடுவோம்
மனித நேயம் காத்திடுவோம்.

எழுதியவர் : ராஜா ps (14-Mar-13, 10:43 am)
சேர்த்தது : raja ps
பார்வை : 170

மேலே