தர்காவின் மோகம் !
தர்காவின் மோகம் கொண்டு
துனியாவிலே ஒரு கூட்டம்
இன்னும் மண்ணறை மேல்
இவர்கள் நாட்டம்
வியாழன் மாலை நேரம் - இங்கு
ஈமானை இழந்த நெஞ்சம்
பூ , பழம் , பத்தி புத்தாடை பூண்டு
தட்டுடன் தரிசனம் வேண்டி
மண்ணறை மேல் மண்டி இடுவார்கள்
மயில் இறகில் ஆசி பெறுவார்கள்
கலிமா சொன்ன கல்பு - இன்று
மறையோனை மறந்து நின்று
இறைவனுக்கு சிபாரிசு இல்லை
இன்னுமா உங்களுக்கு புரிய வில்லை
இணைவைப்பது பெரும் பாவம்
அல்லாஹுவிடம் ஏற்படுத்தும் கோபம்
அழுது , தொழுது கேளுங்கள்
அல்லாஹுவிடமே உங்கள் வேண்டுதலை
அவனே படைத்து பரிபாலிப்பவன் - இன்னும்
வணக்கத்துக்குரியவன் அவன் ஒருவனே !
=ஸ்ரீவை.காதர் =