ஏனடி விட்டாய்

விரலோடு
விலகி விரதங்கள் கொண்டாய்..
நெஞ்சோடு
நெருப்பை அள்ளி வீசினாய்..
கண்ணோடு
வலியுடன் கண்ணீர் தந்தாய்..
காத்திருப்போடு
கவலை சுற்றி எறிந்தாய்...
அமைதியோடு
நிலவையும் சுட வைத்தாய்....
நடையோடு
நெருஞ்சியை தைத்து விட்டாய்....

அன்பை அறைக்குள் விட்டுவிட்டு,
இதயத்தை கட்டி இருட்டில் விட்டாய்..

உயிரை மட்டும் ஏனடி விட்டு விட்டாய்...?

-என் காதலுக்கு ரதி என்று பெயர்.

எழுதியவர் : தீ (2-Apr-13, 3:27 pm)
Tanglish : aenadi vittai
பார்வை : 86

மேலே