நிறைவருள் தருவாய் ரகுமானே !

யா அல்லாஹ் !

நீயே படைப்பின் அதிபதி
உனக்கு மட்டுமே ஸுஜுது செய்வோம்

உன் படைப்பின் அதிசயங்கள் அறிவோம்
எங்கள் படைப்பு வெறும் அற்பம் உலகில்

இன்னும் உன் மீது ஈமான் கொண்டோம்
இறுதிவரை நிலையாக்கி தருவாயாக

அனாசரங்களில் இருந்து காத்து இன்னும்
எங்களை நேர்வழி படுத்துவாயாக

கலிமா சொன்ன நாவையும் - ஈமான்
கொண்ட நெஞ்சையும் நிலை நிறுத்துவாயாக

ஐ வேலை தொழுகையை நிறைவேற்ற
உன் அருளை எமக்கு அளிப்பாயாக

இச்சைகளை துறந்து உண்ணா நோன்பிருக்க
எங்களுக்கு உடல் வலிமையை கொடுப்பாயாக

நீ எமக்களித்த செல்வங்களில் இருந்து
ஜக்காத்து தரும் மனதை நிலையாக்குவயாக

உன் புனித இல்லம் வந்து ஹஜ்ஜை நிறைவு
செய்யும் பாக்கியத்தை தந்தருள்வாயாக

இன்னும் ஷரியத்தின் வழிப்படி நடந்து
மரணித்து உன் திருப்பொருத்தத்தை
எமக்களித்து மறுமை வாழ்வை தர

நிறைவருள் தருவாய் ரகுமானே !

ஸ்ரீவை.காதர்.

எழுதியவர் : ஸ்ரீவை.காதர் (4-Apr-13, 3:54 pm)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 65

மேலே