பார்வை ஒன்றே போதுமே!

மதி நீங்கி
வானம் போல்,
உனை பிரிய
எனை சுற்றி
இருள் சூழ!

மதி இழந்து
மயக்கம் கொண்டு
இன்னது எது?,
ஏது?, என
அறியாது!

தட்டுத்தடுமாறி
தடயம் ஏதேனும்
கிட்டுமாயென எண்ண!

உன்னையே வேண்டுமென
உள்ளம் மன்றாட
கண் திறந்திருந்தும்
காட்சி தெரியாத
பரிதவிப்பின் உச்சத்தில்
நான் துவள!

நாணம் கொண்ட
வான்மதி எழில்
முகில் திரையில்
இருந்து எட்டி
பார்ப்பது போல்!

ஒளிந்திருந்து எனை
முழுமதி முகம்
மட்டும் தெரிய
எட்டி பார்த்தபடி
நீ மெலிதாய்
புன்னகைக்க!

தொலைந்த பொருள்
மீண்டும் கிட்ட
மகிழும் ஏழைபோல்
போன ஒளியோடு
உயிரும் அல்லவா
திரும்புதெனக்கு!

எனக்கு வசந்தத்தை
வாரி வழங்கிட
வேறொன்றும் தேவையன்று,
உன் பார்வை
ஒன்றே போதுமடி!

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (6-Apr-13, 11:39 pm)
பார்வை : 108

மேலே