வழியில் செல்லும்போது விழியில் விழுந்த தேவதை!

தேவதையைக் கண்டேன்
நான் நடுவீதி!
அவளை தீண்டியது கண்கள்
அவை பல சாதி!

அவள் நிற்கும்போது முழுவீதியே
நின்றுபோனதாய் தோற்றம்!
அவள் கடக்கும்போது தென்றல் கொஞ்சம்
தழுவிச் செல்வதாய் தோன்றும்!

அவள் நடைபயில கோடிக்கண்கள்
மறைவாய் படம் பிடிக்கும்!
அவள் ஓரப்பார்வை ஒவ்வொன்றையும்
ரசித்தவாறே கடக்கும்!

இது தினமும் நடக்கும் நாடகம் தான்
அனைவருக்கும் அது தெரியும்!
இதில் நடிப்பவர் பேசும் மௌனவசனம்
அந்த தேவதைக்கும் புரியும்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (10-Apr-13, 3:13 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 176

மேலே