கடற்கரை காதலி அவள்

சொர்கத்தின் சுவாசக் காற்று
சுகமான இளங் காற்று
வர்க்க பேதமிலா பொதுவுடமை
பூங்காற்று
காதோடு வந்து கவிபாடும்
கையோடு கலந்து உறவாடும்
கற்பனைக் கவிஞன் நீ என்று
காலடியில் வணங்கி முத்தமிடும்
நீ நடந்த சுவடுகளே
நான் நடக்கும் வீதி என்று
உலகிற்கு கூவி உரைக்கும்
அலை தழுவி வான் தழுவி
நிலவும் கதிரும் தழுவி
என் தோள் தழுவி நிற்கும்
என் கடற்கரை காதலி அவள் !

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Apr-13, 10:29 am)
பார்வை : 260

மேலே