கடைசித்துளிவரை

என்னவனே!
உனக்காகவும், எனக்காகவும்,
எத்தனைமுறை
தேனீர் செய்தாலும்
ஒரு துளிக்குமேல்
ருசிப்பதில்லை...
எனக்காக
என்றாவது ஒருநாள்
நான்
சோர்ந்திருக்கும் நேரம்
நீதரும் தேனீரோ
கடைசித்துளிவரை
இனிக்கிறதே!

எழுதியவர் : ரேணுகா ஹேமந்த் (18-Apr-13, 7:00 pm)
பார்வை : 141

மேலே