உயிர் வாழும் மரணம்...!!

விழியிரண்டிலும் உன்னை மட்டும்
கண்டுவாழ்ந்த என் கண்களை,
ஏமாற்றி பார்க்க செய்கிறேன்
இவ்வுலகை
என்ன கொடுமை!, மயானம் மட்டுமே தெரிகிறது!

உன்னால் மட்டும் புன்னகைக்காமல்
'மிளிர்ந்த' என் முகம்,
புன்னகை பூசியும்,
வாடிய பூவாகிறது இத்தருணம்....

நீ வெறுத்த என்னை மட்டுமே
வெறுக்க தோன்றுகிறது,
உன்னை சுற்றி திரியும்
என் பரிதாப இதயத்திற்கு.....

"என்ன ஒரு உயிர் வாழும்
மரணம் எனக்கு"

எழுதியவர் : மௌன இசை (21-Apr-13, 9:46 pm)
பார்வை : 87

மேலே