குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு தூக்குத் தண்டனை அவசியம் - காவி கம்யூனிஸ்ட் சீதாரம் யட்சுரி...!
கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிப்பது குறித்து விவாதிக்க எங்கள் கட்சி தயாராக உள்ளது. இது மிகவும் முக்கியமான விஷயம் ஆகும். டெல்லியில் நடந்த கற்பழிப்பு சம்பவம் கொடூரமானது. சமுதாயத்தில் ஏதோ தவறு உள்ளது. மக்களுக்கு சட்டத்தின் மீது மதிப்போ, பயமோ இல்லை.
முதலில் சட்டம் மீது பயத்தை உருவாக்க வேண்டும். அப்படி செய்தால் தான் சட்டத்தை மக்கள் மதிப்பார்கள். போலீசார் இப்படி நடக்கக் கூடாது. அதாவது லஞ்சம் கொடுத்து மக்களின் வாயை அடைப்பதை பற்றி கூறுகிறேன்.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் தாக்கப்பட்டது ஏற்றுக்கொள்ளக் கூடிய விசயமில்லை. இதனால் தான் சட்டத்தின் மீது மதிப்பில்லாமல் போயுள்ளது என்றார்.
சமுதாயத்தில் ஏதோ தவறு உள்ளது என்கிறார். இவர்கள் எல்லாம் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள். அரசியல்வாதிகளிலேயே கம்யூனிஸ்ட்கள் தான் சிறந்த அறிவாளிகள் என்பார்கள். சீதாரம் எட்சுரி செவ்வாய் கிரகத்தில் இருந்து தற்பொழுது தான் வந்தவர் போல பேசியுள்ளார்.
சட்டம் மீது பயத்தை உருவாக்க வேண்டும் என்கிறார். இவ்வளவு காலம் சட்டத்தின் மீது பயம் இல்லை என்று சொல்ல வருகிறாரா...? இதற்கும் மேல் சட்டத்தின் மீது மதிப்போ பயமோ மக்களுக்கு இல்லை என்கிறார்.
கற்பழிப்பு நடத்தியவர்களை மக்கள் என்று சொல்கிறாரா...? இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் என்ற கட்சியில் ஆர்,எஸ்.எஸ்.காரர்கள் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படியே பிரதிபலிக்கிறார்.
தற்பொழுது ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கூட முடிந்த அளவு விளக்கங்களை கூறி வருகிறார்கள்...ஆனால் ஒரு பெரிய கூமுட்டைக்காரன் எவ்வாறு பேசுவானோ அதுபோல பேசி இருக்கிறார் எட்சுரி என்று எடுத்துக் கொள்ளலாமா...?
போராடும் மக்களைக் கண்டால் அஞ்சி குலை நடுங்குகிறது மார்க்சிஸ்ட் கட்சி என்று அவதானிக்க முடிகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
சங்கிலிக்கருப்பு