.♥. காகித பூ .♥.
.♥. காகித பூவே காகித பூவே
கற்பனை ஏற்பாயா?
.♥. காடு மேடு கடந்துவந்த
கனவை பகிர
ஓரிடம் தருவாயா?
.♥. ஓடித்திரிந்து ஆடிகளைத்த
நினைவை நிரப்பிட
சிற்றிடம் தருவாயா?
.♥. நில்லாமல் ஓடும்
உணர்வின் பதிவை
உன்னுள் கோர்ப்பாயா?
.♥. உறக்கமின்றி உளறிச் செல்லும்
இதயப்பதிவை உன்னில்
இருத்திக் கொள்வாயா ?
.♥. காதால் கேட்கும்
கருத்துபிழையையும்
கனிவாய் ஏற்பாயா?
.♥. கரைதொடா என்னிதய
காயத்தின் வலியை
கண்மூடி ஏற்ப்பாயா ?
.♥. கண்ணில் கண்ட
காட்சியை உன்னில்
அணைத்தே சேர்ப்பாயா ?
.♥. மூக்கால் உணரும்
மணத்தின் குணத்தை
எழுத்தால் ஏற்ப்பாயா?
.♥. வெறுத்துத் தள்ளும்
ஈனப்பிறவியின் இருட்டுக்கு
வெள்ளையடிப்பாயா?
.♥. எட்டித்தள்ளும் எதார்த்தத்தை
கட்டிக்காக்க
கருணை புரிவாயா?.♥. .♥. .♥.