நாம் என்றும் நாம்

நான் நான் என்பதே அகம்பாவம்
நாம் நாம் என்பதோ பரந்தமனம் !
இதழ்கள் ஒன்றானால் அது நாம்
உதடுகள் விலகினால் அது நான் !

நாம் நாமாகவே இருந்தால் நலனே
நாம் நானாக மாறினால் துயரே !
இதயங்கள் இணைவது இன்பமே
இருவேறாக பிரிந்தால் துன்பமே !

புரிதல் என்பது வாழ்வில் அவசியம்
அறிந்து தெளிதல் அதனின் முக்கியம் !
பகுத்து உணர்ந்தால் வகுத்து வாழலாம்
அன்பும் அறிவும் அகத்தே தங்கிடும் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (24-Apr-13, 10:43 pm)
பார்வை : 81

மேலே