இப்படித்தான்

உண்மையாக பேசினால்
தொல்லை என்கிறான் !
எதார்த்தமாக பேசினால்
அன்பு இல்லாதவள் என்கிறான் !
இல்லாதவள் காதல் சொன்னாள்
ஆசை கொள்கிறாள் என்கிறான் !
இருப்பவள் காதல் சொன்னாள்!
இருந்தும் அழைகிரால் என்கிறான்
எதுவும் சொல்லாமல் இருந்தால் !
சொல் என்று சொல்கிறான் !
யோசித்து சொல்லலாம் என்றால் !
பல கதைக்கு கதாநாயகியாக உருவம் செய்கிறான் !
சொல்லிவிட்டால் ! கொஞ்சம் !
கோபபட்டுதான் பார்க்குகிறான் !
விட்டுக்கொடுத்துவிட்டால் !
தொட்டுக்கொள்ளலாம் என்கிறான் !
சிரித்துவிட்டு போனால் !
பாசாங்குகாரி என்கிறான் !
பார்க்காமல் போனால் !
அழுத்தக்காரி என்கிறான் !
பார்த்துவிட்டு பேசாமல் போனால் !
திமிரானவள் என்கிறான் !
பார்க்கும்போது பேசினால் !
பாசம் இல்லாதவள் என்கிறான் !
அக்கறையோடு பேசினால் !
தொல்லை என்கிறான் !
சொல்வதை கேட்டால் !
ஏளனம் செய்கிறாய் என்கிறான் !
மௌனமாக இருந்தால் !
உணர்வே இல்லை என்கிறான் !
ஒழுக்கத்தை பின்பற்றினால் !
உயிர் வாழ்வதே சாவதர்க்குமேல் என்கிறான் !
என்ன செய்வது ! இப்படித்தான் ஆண்கள் !

எழுதியவர் : திலகா (26-Apr-13, 4:23 pm)
பார்வை : 131

மேலே