அவள்கடிதம் பிழை(த்) தேன்....

அவள் எழுதிய
கடிதம் முழுதும்
பிழைகளை
தேனாய்
தெளித்திருப்பாள்,


படி
தேன்..
முத்தம் கேட்டிருப்பாள்
மூ,க்கு சுழித்து,

திட்டினால்
சந்தோஷமாம்
அனுமதி கேட்பாள்,

போடாவை
பாடாய் படுத்தி...

வரும் போது
வாங்கி வரச்சொல்லும்
பொருள்களில்

மருந்தை
மறந்து விட்டிருப்பாள்
வீங்கி வருவேனாம்,,,

விசாரிப்புகளில்
குடும்பத்தை
பிரித்திருப்பாள்,
அத்தைக்கு,ஆ
அத்தானுக்குமாஆஆ
பாட்டிக்கே தெரியாது
பட்டியில் அடைப்பட்டது
அம்மா பாவம்
என்றா
சரியாக்கினாள்,

கடைசியாய்
கையெழுத்தில்
அன்பில்
ஆணிவைத்திருப்பள்,
ஆண்புடன் உணவள்
என்று,

எழுதியவர் : சபீரம் sabeera (30-Apr-13, 2:47 am)
பார்வை : 64

மேலே