கொல்லாதே

ஆதவன் சிந்திய சிவப்பை
அள்ளியெடுத்து பூசிக்கொண்ட
விழித்திரைகள், மாலையினை
விரும்பித்தான் வரவேற்றன.

எதிர்நோக்கின காதலன் வருகை
குறிதவறினதால் பூசின சிவப்பை
அழிக்க வழியின்றி குத்திநின்ற
கண்கள், கசிந்தன கண்ணீர்.

உள்ளத்துள் உரசும் ஓர் வலி,
உயிருக்குள் உரசும் ஓர் காதல்,
உடலினுள் உரசும் ஓர் நாதம்,
உன்னிருப்பை உளரும் ஒவ்வொரு நொடியும்.

எழுதியவர் : தீ (30-Apr-13, 8:30 am)
பார்வை : 69

மேலே