"மறந்தும்.... மறவாத..."

கண்ணில் விழுந்த தூசியாய்,
உறுத்துகிறது நீ,,,,
உதிர்த்துச் சென்ற வார்த்தைகள்.....
எண்ணங்களில் உதித்து,
எழுத்துக்களில் நடமாடிய,
என் கவிதைக் குழந்தை
தடுமாறி நிற்கின்றது....
நகர்வதா..... அமர்வதா....
அப்படியே அமிழ்ந்து போவதா...?
வார்த்தைகள் தீயை
உமிழ்ந்ததால்.......
எரிந்து சாம்பலாகி விட்டது..
என் மன ஊஞ்சல்....
ஆடவும் முடியாமல்,
அடங்கவும் முடியாமல்,
அடம் பிடிக்குது
ஆர்ப்பரிக்கும் கடலாய்
ஆழ் மனது........!!

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (30-Apr-13, 11:37 am)
பார்வை : 113

மேலே