அம்மா .....
கொஞ்சம் கூட சுளிப்பில்லை முகத்தில்
துளியளவும் சலிப்பில்லை மனத்தில்
கெட்டு விட்ட உணவை
கொட்டச் செல்ல போகையில் ...
உயிர் போகும்பசி தனக்கிருந்தும்
ஊர்சுற்றப் போன பையன்
வருவான் பசியோடு-- என
வயிர்கட்டி வைத்த உணவை.
சுவற்றுக்குள் சிறைப்பட்ட கற்சிலை
விதையிலிருந்து விடுபட்ட அரசமரம்
மழை நிரப்பிய செயற்கைக் குளம் --என
வரம்தேடி அலைகின்றோம் எங்கெல்லாம் ....
வரமாய் ...
இருக்கின்ற
அம்மாவை
மறந்து.