உயிர்த்து எழுந்ததோ காதல்!

அக்கம் இரண்டதன் இமைகளும் வீங்கிட
ஆக்கையில் ஆகமதில் உறு சோகையில்
இக்கன் தொடுத்த ஆவரி வலியினால்
ஈக்கள் மொய்த்திடும் பழமென ஆனேன்.

உக்கம் போட்டு் ஆடிடும் மனதால்
ஊக்கம் அளித்திடும் ஆடவர் பார்வையில்
எக்களித்து நான் என்னழகு கூட்டியும்
ஏதும் இன்றியே ஏமம் அடைந்தேன்.

ஐங்கணைக் கிழவன் ஐயை என்னையே
ஒக்கம் செய்திட நல்லொரு ஏந்தலை
ஓர்குடி மணாளன் என்று சொல்லியே
ஒளவியம் தனில் ஆட வைத்தானே.

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ் (7-May-13, 3:14 pm)
பார்வை : 127

மேலே