புதிய அத்தியாயமாக இருக்கட்டும் ..!!!

புயலில் சிக்கி தவித்துக்கொண்டு
இருக்கிறது -நம் பிரிவு
தப்பிக்க வழி உண்டானால்
மீண்டு வா இல்லையெனில்
நிரந்தரமற்ற நம் பிரிவு நிஜமாகிவிடும்

நாம் இருவர் அல்ல ஒருவர் தான் மனதளவில்
அன்புக்கு இலக்கணம் கூறிய நம் காதல்
பிரிவினால் வாடியபோதும்
பரிவுடன் ஏங்குகிறது இன்னும்
உன் அன்புக்காக....

வாகண்ணே பிரிவுக்கு ...
நாம் பிரிவு வைப்போம் ...
அது காதலுக்கு நாம் .உருவாக்கும் ..
புதிய அத்தியாயமாக இருக்கட்டும் ..!!!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (16-May-13, 6:26 am)
பார்வை : 150

மேலே