"காதல் வந்தால் "...........

கவிவிளக்கம் கண்டுணர்ந்து
காவியக் காதலை கண்ணுள் கலந்து
இன்பத்துகள்கள் இன்னிசை மழை பொழிய
காதலின் இன்பமோ ஆழ்மனதில் உள்நீச்சல்
குளம் செய்ய
மூச்சு விட மறந்து மூளை உன் பேச்சை மதியாமல்
கண்கள் நான்கும் மொழிகளில் இல்லா வார்த்தைகளை பேசி மகிழ்ந்திட
உள்ளமோ மகிழ்சிக்கடலில் மிதந்திட
இனம் புரியா மகிழ்ச்சி ஒன்று சத்தமிட்டு நடனமாடும் !

எழுதியவர் : வேல்முருகானந்தன்.சி (16-May-13, 3:01 pm)
பார்வை : 137

மேலே