கோதாவரியே !

கார் கூந்தலை
கோதிவிட்டு செல்லும்
கோதாவரியே- என்
இதயத்திலும்
மோதிவிட்டு சென்று விட்டாயே !
என் இதயத்தில் பட்ட காயம்
ஆற வேண்டுமெனில் - உன்
கடைக்கண் பார்வை ஒன்றை
மட்டும் என்மீது
வீசி விட்டு போடி
அதுவே போதும் அருமருந்தாய் .

************* நம்பிக்கையுடன் .சிங்கை கார்முகிலன்

எழுதியவர் : சிங்கை கார்முகிலன் (21-May-13, 10:00 am)
பார்வை : 54

மேலே