...............காதலுக்கு நெருக்கமாய்...........

ரசிக்கப்படும்படியான வரிகள்,
உன்னுடையவை என்றாய் !
எழுதுகிறேன் மெனக்கெட்டு,
அதற்குள் நீ வசிக்கும் நிமிடங்களுக்காக !!
-----------------------------------------------------------------
வானம் வைத்த பொட்டு நிலவு !
பொட்டு வைத்த நிலவு நீ !!
------------------------------------------------------------------
நீ தடவிப்போன கன்னத்தில்,
உருண்டு தவழ்ந்த நீர்த்துளி,
உலர்ந்துபோனது,
உன் ஸ்பரிசம் நினைத்ததும் !!
--------------------------------------------------------------------
நான் பெற்ற பெயர் சுமார்தான் !
நீ எனை அழைக்கும் எந்தப்பெயரின் முன்னும் !!
---------------------------------------------------------------------------
காதல் உணரப்பட்ட தருணம் !
பிணையக்கைதியாய் நான்,
உன் இமைகளுக்குள் இருந்தேன் !!
-----------------------------------------------------------------------------

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (24-May-13, 6:49 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 59

மேலே