mooda nampikkai..
மணமான
இரு ஆண்டுகள் கழித்து
தவமிருந்து பெற்றாள் அன்னை..!
வேண்டுதல்
பிரார்த்தனை
பக்தி என- ஒவ்வோர்
ஆண்டும் பட்ஜெட்டில்
இடம் பெற்றது ஏதேனுமொரு
ஆலயம்..
மகளை விட
கவனிப்பு அதிகம்
கடவுளுக்கு..
மகளே வரமாய் வந்தவளாம்.
கடவுள் தான் நம்பிக்கை..
------> பெற்றோர்.
நவநாகரீக உலகம்..
விழிப்புணர்வுக் கல்வி..
தெளிந்த அறிவு..
நம்பிக்கை தான் கடவுள்..
-----> மகள்.
பிறந்தநாள் விழா..
பிள்ளையார்க்கு உபச்சாரம்..
பத்தாயிரம் உபகாரம்..
----->மகள் பெயரில்
பெற்றோரின் அறிவிப்பு..
சங்கடத்தோடு
உடன்செல்லும் மகள்.
கோவில் வாசலில்
வயதான முதியோருக்கு
இனிப்பு வழங்கி
ஆசி பெற்றதில்
தீர்ந்தது சங்கடம்..