கதை பிறந்த கதை

கதை கதையாம் காரணமாம்
காரணத்துல தோரணமாம்
தோரனதுல தொப்பரபில்லாம்
தொப்பர பில்ல புடிங்கி மாட்டுக்கு போட்டானாம்
மாடு பால் கரந்துசாம் பால கொண்டுகிட்டு
கோவிலுக்கு போனானாம்
கோவில் பூராம் பாம்பா இருந்துச்சாம்
பாம்படிக்க தடியெடுக்க போனானாம்
தடியெல்லாம் சேரா இருந்துச்சாம்
சேர கழுவ ஆத்துக்கு போனானாம்
ஆறெல்லாம் மீனா இருந்துச்சாம்
மீன் பிடிக்க வலைஎடுக்க போனானாம்
வலையெல்லாம் ஓட்டையா இருந்துச்சாம்
வலைய தைக்க ஊசியெடுக்க போனானாம்
ஊசியும் பாசியும் உருண்டோடி போயிருச்சாம்

எழுதியவர் : ஆ.சுதந்திரம் (1-Jun-13, 2:29 pm)
சேர்த்தது : சுதந்திரம்
பார்வை : 625

மேலே