யோசித்தால் யோசிக்க வைப்பவை (9)

கனவுகள் கூட விற்பனைக்கு தந்தையின்
கனவு மகனை கல்லூரியில் சேர்க்க ..................

விரதம் சாமிக்காம்
வேதனை வயித்துக்காம் ...................

உதவாது என்றறிந்தும் ஓட்டுப்போடுகிறோம்
உதவாக்கரை ஒன்றைஉறுதி செய்ய ...................

ஒவ்வொருவருடம் சுதந்திர நாளில்
கொடியேற்றி பறக்க விடுகிறோம் நாம் பெற்ற சுதந்திரத்தை .......

சட்டை போட்டா மட்டும் போதாது
அதன் மேல் சந்தோசத்தையும் மாட்டவேண்டும் .....

அசைபோடுவது விலங்கு மட்டுமல்ல
மனிதனும்தான் வேண்டாத விஷயத்தை ...............

கூவும் குயிலுக்கு தெரியாது தனது குரல்
சிலருக்கு இம்சையாக இருக்குமென்று .................

பௌர்ணமியின் சிரிப்பு அமாவாசை வரைதான் அமாவாசையின் அழுகை ......................

அமைதிக்கு ஆயிரம் அர்த்தம்
அதிகம் பேசினால் அங்கே யுத்தம்..........

செய்யாதே என்பதை விட செய் என்று சொல்லிப்பார் செய்வதில்லை எம்மவர்கள் ........

.....................................................தொடரும் ..................

எழுதியவர் : bhanukl (6-Jun-13, 4:01 pm)
பார்வை : 163

மேலே