உங்களால் (உங்களில்)ஒருவன்

நான் எட்டிப்பிடிக்கும் எழில்மிகு
காட்சிகளை எல்லாம் படமாக்கிச்
பாருக்கு இட்டுச் செல்லும்!

எனக்காகவும் எதற்காகவும்
துக்கத்தை தண்ணீர் கொண்டு
துடைத்தெறிந்துவிடும்!

நான் துயருறும் போதெல்லாம்
உலகத்தை இருட்டாக்கி
உள்மனதை வெளிச்சமாக்கும்!

எனது ஆழ்ந்த துக்கத்தையும்
அளவளாவிய சந்தோஷத்தையும்
நானே அனுபவித்திட கதவைசாத்தி
கருணை புரிந்திடும்!

உலகத்தை நான் கடக்க
ஊறு செய்யும் உபத்திரத்தை
என் மூளைக்கு ஊடு செய்யும்!

உற்ற துணைக்கு உயிர் கொடுக்கும்
உயிர் போகும் நேரத்தில்
உதாசீனப்படுத்தி விடும் !

ஒளியை நான் ரசிக்க விரும்பின்
உணர்ச்சியை இருட்டாக்கி
உணர்வுக்கு வழிவகுக்கும்!

உலகினை ஊடகமாக்கி
உண்மையை வெளிச்சமாக்கும்
உயிரின் உன்னத படைப்பு!

எனை பாடாத கவிஞனும் இல்லை
எனை புகழாத காதலனும் இல்லை
நான் ஒளிகொண்டால் இவ்வுலகில்
தேவையில்லை பிறர் துணை!

எழுதியவர் : bhanukl (18-Jun-13, 5:53 am)
பார்வை : 147

மேலே