மனம் சொல்லும் வரிகள் காதலில் .........................

என்னவளே

உறங்கும்போதும் கனவிலும்
விழித்தபின் நினைவிலும்
எல்லா நொடிகளும் எடுத்து கொள்கிறாய்
என் அனுமதி கேட்காமலே

எடுத்து கொள்வது நீ என்பதால்
மறுப்பு சொல்ல மறுக்கிறது மனது
என் மனம் காதலால் ஆனது உனது
ஆட்டிபடைப்பதுதான் காதலோ ??????

உன்னோடு ஏற்பட்ட வாதத்தில்
உன்னை பிரிய நேரும் சில நாட்களில்தான்
இன்னும் அதிகமாய் நினைக்கவைக்கிறாய்
உன் அருகில் இருக்கும் தருணங்களைவிட

ஏனோ உனக்கும் அந்த வருத்தம் இருக்கிறதோ
என்றும் கேட்டு கொண்டே
கவலை கொள்ளும் மனதிற்கு
தெரியவே இல்லை காதல் வலி என்னவென்று

நீயாக வந்து அக்கறை எடுத்து கொள்ளும்வரை
அனாதையாக இருக்க செய்ய போகிறேன்
உன் காதலையும் நினைவுகளையும்
தண்டிப்பதாய் நினைத்து
தண்டனை அனுபவிக்கிறேன் தனிமையில் ....

எழுதியவர் : ருத்ரன் (18-Jun-13, 10:49 am)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 95

மேலே