மனம் சொல்லும் வரிகள் காதலில் -2

உனக்கும் எனக்குமான புரிதலில்
விழும் விரிசல் நம்மை பிரிக்கும்
பிரிவு கற்று தரும் பாடம்
காதலை விடுவதற்கு அல்ல
காதலுடன் வாழ்வதற்கு

மனம் வலிக்கும் வார்த்தைகள்
உன்னால் பயன்படுத்த படுகையில்தான்
நிஜமாய் வலிக்கிறது எனக்கல்ல
நான் வைத்த உன்மீதான காதலுக்கு

காயம் தரும் காதல்
கானல் நீராய் கனவு
தீராதோ என் தாகம்
தேட விடும் கவிதை

எழுதியவர் : ருத்ரன் (18-Jun-13, 12:38 pm)
பார்வை : 96

மேலே