உன்னைச் சுற்றியே உழலும் பூமி...!

செங்கதிராய் சிரித்தாலும் -நீ

வெங்கதிராய் வதைத்தாலும்

தனைத் தொலைத்தாலும்

தன்பிள்ளைக்காய் வாழுந்தந்தை போல்

உன்னைச் சுற்றியே

உழல்கிறது பூமி......!

காணாத போதெல்லாம்

கண்ணீர் வடிக்கிறான் -( பனி )

காண முடியாமல் போனால்

கணத்திலே வெடிக்கிறான் - ( மழை)...

எழுதியவர் : காசி.தங்கராசு (22-Jun-13, 3:39 am)
பார்வை : 183

மேலே