உன்னைச் சுற்றியே உழலும் பூமி...!
செங்கதிராய் சிரித்தாலும் -நீ
வெங்கதிராய் வதைத்தாலும்
தனைத் தொலைத்தாலும்
தன்பிள்ளைக்காய் வாழுந்தந்தை போல்
உன்னைச் சுற்றியே
உழல்கிறது பூமி......!
காணாத போதெல்லாம்
கண்ணீர் வடிக்கிறான் -( பனி )
காண முடியாமல் போனால்
கணத்திலே வெடிக்கிறான் - ( மழை)...