கந்­த­ரோ­டையில் கி.மு. மூவா­யிரம் ஆண்­டு­க­ள் பழமையான அம்­மிக்கல்

யாழ் கந்­த­ரோடைப் பகு­தியில் சுமார் மூவா­யிரம் ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்ட தமி­ழர்கள் பயன்­ப­டுத்­திய அம்மிக்கல் ஒன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னோடு அக்­கா­லத்தில் பயன்­ப­டுத்­தப்­பட்ட மண்சட்டி, பானை­களின் ஓட்டுத் துண்­டுகள் மற்றும் கல் மணிகள் என்­ப­னவும் கண்­டு­ பி­டிக்­கப்­பட்­டுள்­ளன.

கொக்­கு­விலில் அமைந்­துள்ள ஆகோள் ஆய்வுமையத்தைச் சேர்ந்த நான்கு அகழ்வு ஆராட்­சி­யா­ளர்­களைக் கொண்ட குழு­வினர் கடந்த நவம்பர் மாதம் கந்­த­ரோடைப் பகு­தியில் மேற்­கொண்ட அகழ்­வா­ராய்­சியின் போது இவற்றைக் கண்டு பிடித்­தனர்.

கண்டு பிடிக்­கப்­பட்ட பொருட்­களில் அம்­மியின் புகைப்­ப­டத்­தையும் அம்மியின் ஒரு பகு­தி­யையும் சில ஓட்டுத் துண்­டு­க­ளையும் எக்­கா­லத்­துக்­கு­ரி­யவை என்­பதைக் கண்­ட­றி­வ­தற்­காக தமிழ்­நாடு தஞ்­சாவூர் தமிழ்ப் பல்­க­லைக்­ க­ழ­கத்­திற்கு கடந்த டிசம்பர் மாதம் ஆய்­விற்­காக அனுப்பி வைத்­தனர்.

ஆய்வின் முடிவில் அம்மிக் கல் கிறிஸ்­து­வுக்கு முன் சுமார் மூவா­யிரம் ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்­டது எனக் கண்டறி­யப்­பட்­டுள்­ளது. ஓட்டுத் துண்­டுகள் சுமார் 25௦௦ ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்­டவை எனக் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளன.

இவ் அகழ்­வா­ராய்ச்­சியில் ஈடு­பட்­ட­வர்­களில் ஒரு­வ­ரான தமி­ழியல் மற்றும் தொல்­பொருள் ஆய்­வாளர் கலா­நிதி ஜெ. அராங்­கராஜ் இது தொடர்­பாகத் தெரி­விக்­கையில்,

கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் திகதி எமது ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்­வா­ளர்­க­ளான சுரேஷ், நெந்­தூரன், நட­ராஜா ஆகியோர் கந்­த­ரோடைப் பகு­தியில் அகழ்­வா­ராய்ச்­சியில் ஈடு­பட்­ட­போது இவ் அம்மிக்க­ல்லையும் வேறு சில மண் பாத்­திர எச்­சங்­க­ளையும் கண்­டெ­டுத்தோம் என்று தெரிவித்தார்.

தரை­யி­லி­ருந்து நாலடி ஆழத்தில் தோண்­டும்­போதே நான்கு கால்­க­ளை­யு­டைய இந்த அம்­மிக்கல் கண்டுபிடிக்கப்பட்­டது. அத்­துடன் கல் மணிகள், பானை ஓடுகள், ரோமா­னி­யர்­களின் நாண­யங்கள் இரண்­டா­யி­ரத்து 300 ஆண்­டுகள் பழ­மை­யான சுடு­மண்­ணினால் செய்­யப்­பட்ட சீன நாட்டின் பானை ஓடுகள், தாழி ஓடுகள், கறுப்புச் சிவப்­புப்­பானை ஓடுகள் போன்ற பொருட்­களும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டதாகக் குறிப்பிட்டார்.

கண்­டெ­டுக்­கப்­பட்ட அம்­மிக்கல் எக்­கா­லத்­துக்­கு­ரி­யது என எம்மால் உட­ன­டி­யாக தெரிந்து கொள்ள முடி­ய­வில்லை. இதனால் இதன் புகைப்­ப­டத்­தினை தமிழ் நாடு தஞ்­சா­வூ­ரி­லுள்ள தமிழ்ப் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு ஆய்­விற்­காக அனுப்பி வைத்தோம்.

அங்கு கல்­வெட்­டுக்கள் மற்றும் தொல்­லியல் பேரா­சி­ரியர் கலா­நிதி மா. பவானி இதனை ஆய்­விற்கு உட்­ப­டுத்தி இற்­றைக்கு மூவா­யிரம் (பெருங்­கற்­காலம்) ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்­டது எனக் கண்டு பிடித்ததாகவும் தெரிவித்தார்.

இவ் அம்­மிக்­கல்லின் மாதி­ரியை இந்­தியா, தமிழ் நாட்டில் கொடு­மலை, கன்­னி­யா­கு­மரி போன்ற இடங்­களில் கண்டெ­டுக்­கப்­பட்ட தமி­ழர்­களின் பாரம்­ப­ரிய அம்மிக் கல்­லுடன் ஒப்­பிட்டுப் பார்த்­த­போது அவற்றுடன் இந்தக் கல்லும் ஒத்துப்போவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனாலேயே இவ் அகழ்வாராய்ச்சியின் முடிவை உடனடியாக அறிவிக்க முடியவில்லை. இவ்வாறு முன்னர் கண்டெடுக்கப்பட்ட இம் அம்மிக்கல்லை ஒத்த அம்மிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் பேராசிரியர் செ.கிருஷ்ணராஜாவிடமும் உள்ளது என்று மேலும் தெரிவித்தார் அவர்.

நன்றி தகவல்

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (29-Jun-13, 10:49 pm)
பார்வை : 102

சிறந்த கட்டுரைகள்

மேலே